அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போதைய கடும் பனிப்பொழிவால் பருவ மழை பெய்யுமா? என விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். தஞ்சாவூர் அய்யம்பேட்டை
தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பருவ மழை வெளுத்து வாங்கியது.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து நின்று விட்டது. இந்த மாவட்டங்களின் சில ஊர்களில் மட்டுமே சாரல் மழைபெய்தது. மற்ற ஊர்களில் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
கடந்த சில நாட்களாக அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த பனி மூட்டத்தால் பருவ மழை பெய்யுமா? என்ற கலக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.