Author: Karthick

மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். தினத்தந்தி ஏப்ரல் 30, 11:56 pm Text Size டிம் டேவிட் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 45 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தன. மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன்…

Read More

சென்னை, ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் ஆடின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செயவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணியில்’கான்வே 92 ரன்கள் குவித்தார் இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது , மிடில் ஓவரில் இரண்டு ஓவர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டிய இடத்தில் மோசமாக பந்து வீசினோம். நங்கள் வீசிய 2 மோசமான ஓவர்கள்…

Read More

தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அழகுறக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. பெரியகோவிலின் கட்டமைப்பும், அதன் பிரமாண்டமும் அதை காண்பவர்களுக்கு எப்போதும் சிலிர்ப்பைத் தந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராளமானோர் பெரியகோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் முன்பு சித்திரை திருவிழா 20 நாட்கள் நடைபெறும் பெருந்திருவிழாவாக இருந்து வந்தநிலையில் காலப்போக்கில் 18 நாட்களாக சுருங்கிவிட்டது. என்றாலும் இந்த விழா வெகு விமரிசையாகவே கொண்டாடப்பட்டன. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் நின்றுபோன இந்த விழாக்கள் மீண்டும் நாயக்கர் மன்னர்கள், அவர்களை தொடர்ந்து மராட்டிய மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்டன. நின்று போன தேரோட்டம் காலப்போக்கில் தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்தன. மராட்டியர்களுக்கு பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. செலவு செய்து தேரை ஓட்டுவதற்கு யாரும் முன் வராததால் தேரோட்டம் நின்று போனது. இதனால் இடைப்பட்ட காலத்தில் சித்திரை திருவிழா களையிழந்து காணப்பட்டது. பெரியகோவிலில்…

Read More

மும்பை, நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் வழிநடத்தி வருகிறார். இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளது.. 7 போட்டிகளில் விளையாடி உள்ள கேப்டன் ரோகித் சர்மா 181 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு உடல் தகுதியுடன் இருக்கும் வகையில் ரோகித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்போதைக்கு ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும். அவர்…

Read More

தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் படிவங்கள் வழங்கும் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திருஞானசம்பந்தம், சேகர், ரத்தினசாமி, இளமதி சுப்பிரமணியன், ராமச்சந்திரன், ராம ராமநாதன், கோவிந்தராசு, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி பகுதி செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக மே 4-ந் தேதி தஞ்சை வருகிறார். அவர் ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் எனது ஏற்பாட்டின் பேரில், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர். தஞ்சைக்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சியோடு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதில் அனைவரும் பாரபட்சம் காட்டாமல் ஆர்வமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று அ.தி.மு.க.வில் உறுப்பினர்களை…

Read More

கொல்கத்தா, 16வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் நிதிஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங்செய்து வருகிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் காடர்ன் மைதானத்தில் நடைபெற்றாலும் சேப்பாக்கத்தில் நடைபெறுவது போல சென்னை அணிக்கு ஆதரவு இருக்கிறது. மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாகவே காட்சியளித்தது. மைதானத்தில் சென்னை அணி ரசிகர்களே அதிக அளவு நிரம்பி இருந்தனர். இந்த புகைப்படங்களை பகிர்ந்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More

பெங்களூரு, 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலி , டு பிளசிஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் போல்ட் பந்துவீச்சில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் மேக்ஸ்வெல் , டு பிளசிஸ் இணைந்தது அதிரடி காட்டினர் . ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடர்ந்து சிக்ஸர்கள் பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்தனர்.…

Read More

தஞ்சாவூர் பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடைபெற்றதையும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ வழிபாடு.

Read More

இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசன் 16 மார்ச் 31 வெள்ளிக்கிழமை தொடங்கும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) உடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதும். 2022ல் குரூப்-ஸ்டேஜில் வெளியேறிய பிறகு இந்த சீசனில் சென்னை ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற ஆர்வமாக இருக்கும் அதே வேளையில், குஜராத் தனது பட்டத்துக்கான பாதுகாப்பை அதிக அளவில் தொடங்கும் என்பதால், இந்த போட்டி வாயில் நீர் பாய்ச்சுவதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. GT vs CSK Match Details Gujarat Titans vs Chennai Super Kings, 1st Match, IPL 2023 Venue: Narendra Modi Stadium, Ahmedabad Date & Time: Friday, March 31, 7:30 PM IST Telecast & Streaming Details: Star Sports Network and JioCinema

Read More

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்கு சென்று கொண்டிருந்த V.முருகையா என்கிற மினி பேருந்து தஞ்சை பாலாஜி நகர் டிவிஎஸ் ஷோரூம் அருகே செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் ஒரு பெண் உட்பட்ட இருவருக்கும் காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். மேலும் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார், தஞ்சை மின்சார வாரியத்திற்கு சொந்தமான போஸ்ட் மரம் ஒன்று மினி பஸ் மோதியதில் நான்கு தூண்டாகி கீழே விழுந்து கிடக்கிறது. விபத்துக்கான காரணம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என போக்குவரத்து காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More