Author: Karthick

கோடம்பாக்கத்துக்கு 2023 கொண்டாட்டமான ஆண்டாக அமையப் போகிறது. முன்னணி கதாநாயகர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. அதோடு, அவர்கள் நடிக்கப்போகும் புதிய படங்களின் படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளன. விஜய்யின் `வாரிசு’, அஜித்குமாரின் `துணிவு’ படங்கள் பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளன. `வாரிசு’ படம் வழக்கம் போல் பேமிலி, ஆக்ஷன், காதல் கலந்த கமர்ஷியல் சினிமாவாக வெளிவர உள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். ` வாரிசு’ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்திலும் நடிக்க சம்மதித்து உள்ளாராம். அஜித் நடித்திருக்கும் `துணிவு’ படமும் `பாக்ஸ் ஆபீஸ்’ வெற்றிக்காக காத்திருக்கிறது. ` நேர்கொண்ட பார்வை’, `வலிமை’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத், அஜித்துடன் இணைந்து `ஹாட்ரிக்’ அடிப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். ரஜினி, கமல் படங்கள் எப்போது திரைக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாடு விழாக்கோலம் காணும். 2023-ம்…

Read More

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. https://www.youtube.com/watch?v=2DlOYVF_eOI நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ குறித்து இன்று முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் 2023 ஏப்ரல் 28-ந்தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தஞ்சாவூர் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக தஞ்சை-கும்பகோணம் வழியாக அடுத்த மாதம்(ஜனவரி) 17-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பணி புரிந்து வருபவர்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்படி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன.சொந்த ஊருக்கு செல்பவர்கள் மீண்டும் தாங்கள் பணிபுரியும் சென்னை போன்ற ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக தஞ்சை-கும்பகோணம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 17-ந் தேதி அடுத்த மாதம்(ஜனவரி) 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 11.40 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(எண்:06044) நாகர்கோவில், வள்ளியூர்,…

Read More

இந்தியா சார்பில் அஸ்வின் , உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டும் , உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். டாக்கா, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் அந்த அணியின் ஜாகிர் ஹசன் 24ரன்களிலும் , நஜ்முல் ஹொசைன் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மொமினுல் ஹக் நிலைத்து ஆடி ரன்கள்…

Read More

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் பிரதான குடிநீர் குழாய் வாழ்வு பழுதடைந்துள்ளதால் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே தஞ்சை மாநகரில் உள்ள 6-வது வார்டு முதல் 28-வது வார்டு வரை இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை), நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

தஞ்சாவூர் மாநகராட்சி 30 வார்டில் தூய்மை பாரதம் அமைப்பில் சார்பிலும் தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் இணைந்து பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி உருவாக்கிட மார்கழி மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக்கான கோலப்போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக பட்டு சேலையும் இரண்டாம் பரிசாக 10 கிராம் வெள்ளி நாணயமும் மூன்றாம் பரிசாக எவர்சில்வர் பாத்திரமும் மற்றும் ஆறுதல் பரிசாக எட்டு மகளிர்களுக்கு சேலைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் மேலும் எனது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது அனைத்து நிகழ்வுகளிலும் தஞ்சை மாநகராட்சி நல அலுவலர் திருமிகு சுபாஷ் காந்தி அவர்களும் சுகாதார ஆய்வாளர் திரு செல்வமணி அவர்களும் மேற்பார்வையாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்களும் மற்றும் முன்னோடிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் இனிப்பு மற்றும் கேக் வழங்கிய தருணம். என்றும் சமூக சேவையில்…

Read More

செங்கல்பட்டில், தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான சீனியர் என்கின்ற எலைட் பிரிவில் 19 முதல் 39 வயதுக்கு உட்பட்ட 200க்கும் அதிகமான வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 81 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களுக்கான போட்டியில் தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவி குணவர்தினி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இவர் மத்திய பிரதேச தலைநகர் கோபாலில் நடைபெற உள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 70 முதல் 75 கிலோ எடை பிரிவில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவி பிரீத்தி இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். இவர்களையும் பயிற்சி அளித்த தஞ்சை மாவட்ட குத்து சண்டைக் கழக பொதுச்செயலாளர் ஜலேந்திரனையும் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட், குத்து சண்டைக் கழக மாவட்ட தலைவர் அந்தோணிசாமி, துணை தலைவர் சிவா ஆகியோர் பாராட்டினர்.

Read More

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் பூச்சந்தையைத் தொடா்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா். தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பூக்காரத் தெரு வியாபாரிகள், பொதுமக்கள் அளித்த மனு: தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் பூச்சந்தை 100 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது. இதை நம்பி 500-க்கும் அதிகமான குடும்பங்கள் பூ கட்டி பிழைப்பு நடத்தி வருகிறோம். இதில் வியாபாரிகள் சிலா், சில காரணங்களுக்காக வெளியே சென்று வியாபாரம் செய்து வருகின்றனா். அவா்களை மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு அழைத்து வந்து, அதே இடத்தில் கடை நடத்தவும், வியாபாரிகளுக்குள் இணக்கமான உறவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியில் சென்ற வியாபாரிகள் வராத பட்சத்தில் பூச்சந்தையை நம்பி உள்ள அனைத்து குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, இந்தப் பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அஞ்சலகத்தில்…

Read More

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்னகத்தே ஈர்த்த இந்த இறுதியுத்தம் முதல் வினாடியில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்தது. தொடக்கத்தில் அர்ஜென்டினா அணியின் கையே ஓங்கியது. அட்டகாசமான தற்காப்பு வளையத்தை உருவாக்கி எதிராளிகளிடம் பந்து அதிகம் செல்லாதவாறு பார்த்துக் கொண்ட அர்ஜென்டினா அணியினர் அடிக்கடி பிரான்சின் கோல் கம்பத்தை நோக்கி படையெடுத்தனர். ஒரு சில ஷாட்டுகள் தடுக்கப்பட்டன. 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஜிரூட் நீண்ட தூரத்தில் இருந்து தலையால் முட்டிய பந்து கம்பத்திற்கு மேலாக பறந்தது. முதல் பாதியில் 2 கோல் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா முதல்…

Read More

ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். சென்னை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரை 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More