Author: Karthick

இந்தியா 71 க்கு 2 (மந்தனா 51*) இலங்கையை 65 க்கு 9 (ரணவீரா 18, ரேணுகா 3-5, ராணா 2-13) எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சில்ஹெட்டில் இலங்கையை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஏழாவது மகளிர் ஆசிய கோப்பை பட்டத்தை வென்ற இந்தியா தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்தியது. போட்டியில் தனது முதல் அரை சதத்தை விளாசிய ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஒன்பதாவது ஓவரில் 66 ரன்களை மட்டுமே சேர்த்தனர். பெண்கள் போட்டியின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முழுதும் விளையாடிய இலங்கையின் 9 விக்கெட்டுக்கு 65 ஓட்டங்கள் மிகக் குறைந்த ஸ்கோராகும். இந்தியா 69 பந்துகள் மீதமிருந்த நிலையில் அதைத் துரத்தியது, இது மகளிர் டி20 ஐ டைட்டில் மோதலில் மற்றொரு சாதனையாக அமைந்தது. ரேணுகா சிங் இலங்கையின் முதல் ஐந்து விக்கெட்டுகளில் நான்கில் ஒரு…

Read More

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் 5- வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் 5-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டியவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர், முக்கொம்பு மற்றும் கல்லணையை வந்தடைந்ததும் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இந்நிலையில் அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல்போல் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளப் பெருக்கால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான…

Read More

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,500 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவுப்படி, மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் முக்கிய வீதிகளில் உதவி ஆய்வாளா்கள் தலைமையில் குற்றப் பிரிவு காவலா்கள் உள்பட 1,500 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், மாவட்டம் முழுவதும் 1,546 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நவீன கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணிநேரமும் காவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். குற்றச் செயல்களை விரைந்து சென்று தடுப்பதற்காக 54 இரு சக்கர ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் 259 குற்ற எண்ணமுடையோரின் பெயா்கள் சேகரிக்கப்பட்டு, அவா்களைக் காவலா்கள்…

Read More

தஞ்சையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- ஊர்க்காவல் படை தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 1 பெண் உள்பட 35 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சோ்ந்த பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். இந்த தேர்விற்கான விண்ணப்பங்கள் தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கப்படுகிறது. உடல் தகுதி தேர்வு ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நேரில் பெற்று, உரிய முறையில் பூர்த்தி செய்து சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 புகைப்படங்கள், கல்வி சான்றிதழ்கள், ஆதார்…

Read More

தஞ்சை கடல் பகுதியில் அழிந்து வரும் கடல் பசு இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடல் பசு கடல் பசுக்கள் பாலூட்டி வகையைச்சேர்ந்த உயிரினமாகும். நன்கு வளர்ந்த கடல் பசு 10 அடி நீளமும், 275 முதல் 350 கிலோ எடை கொண்டதுமாக இருக்கும். இதன் குட்டிகள் 3 அடி நீளமும், 35 கிலோ முதல் 40 கிலோ எடை கொண்டதுமாக இருக்கும். இதன் ஆயுட்காலம் 70 ஆண்டுகளாகும். 6 வயது முதல் 17 வயது வரை இனப்பெருக்கம் செய்யும் காலம். இதன் தலை மற்றும் முக அமைப்பு வட்ட வடிவிலும் தாடை கீழ் நோக்கியும் இருக்கும். லேசான ரோமங்களுடன் மென்மையான தோல் அமைப்புகொண்டது கடல் பசு. தமிழக பகுதிகளில்… கடலுக்கு அடியில் உள்ள நிலத்தடியில் வளரும் கடல் புற்களை உணவாக உட்கொள்ளும் கடல் பசுக்கள் அரிய வகை உயிரினங்களாகும். உலக அளவில் இந்தியப்பெருங்கடல்…

Read More

தஞ்சையில் ஒரு கிலோ எலுமிச்சைப்பழம் ரூ120-க்கும், பழம் ஒன்று ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சைப்பழம் பழங்காலம் முதலே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு எலுமிச்சைப்பழம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. எல்லாகாலங்களிலும் எலுமிச்சைப்பழம் கிடைக்கிறது. கோடை காலங்களில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானம் தயாரிப்பதற்கு எலுமிச்சைப்பழம் பெரிதும் பயன்படுவதால் மற்ற காலங்களைவிட கோடை காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட எலுமிச்சைப்பழம் விலை தஞ்சை காவேரி நகரில் உள்ள காமராஜர் தற்காலிக மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை கடைகளில் ஒரு பழம் ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் விலை அதிகரித்து கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சைப்பழம் நேற்று ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனைசெய்யப்பட்டது. சின்னவெங்காயம்-முருங்கைக்காய்…

Read More

IND vs SA 3வது ODI: இலக்கைத் துரத்திய இந்தியா, ஷிகர் தவானை ஆரம்பத்தில் இழந்தது, ஆனால் இலக்கு அதிகமாக இல்லை, இது ஷுப்மான் கில் தனது ஷாட்களை சுதந்திரமாக விளையாட அனுமதித்தது. திறமையான தொடக்க ஆட்டக்காரர் தனது அரை சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்டார். இஷான் கிஷானும் பெரிய ஸ்கோரை எடுக்கத் தவறி 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்ஸரை அடித்து இந்தியாவுக்கான போட்டியையும் தொடரையும் சீல் செய்தார். அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 27.1 ஓவர்களில் வெறும் 99 ரன்களுக்கு இந்தியா சுருட்டியதால் குல்தீப் யாதவ் தனது நான்கு விக்கெட்டுகளுடன் அசத்தலான பந்துவீச்சாளர்களை வழிநடத்தினார். ஈரமான அவுட்ஃபீல்டு காரணமாக 30 நிமிட தாமதத்திற்குப் பிறகு முதலில் பந்துவீச கேப்டன் ஷிகர் தவானின் முடிவை குல்தீப் (4/18), ஷாபாஸ் அகமது (2/32) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (2/15)…

Read More

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கால்நடை மருத்துவ வசதி கிடைக்கபெறாத கிராமங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள கால்நடைகளின் நலன் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்த ஆணை பிறப்பித்துள்ளார். அதன் பேரில் 2022-2023-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. 280 இடங்களில் முகாம்கள் அதன்படி ஒரு ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம் 280 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2023) மார்ச் முடிய நடத்தப்பட உள்ளது. முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சிறு…

Read More

பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றான தஞ்சையின் மையப்பகுதியில் உள்ளது தஞ்சை ரெயில் நிலையம். தென்னக ரெயில்வேயில் உள்ள திருச்சி கோட்டத்தில் தஞ்சை 2-வது பெரிய ரெயில் நிலையமாக திகழ்ந்து வருகிறது. தஞ்சை ரெயில் நிலையம் வழியாக தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் என 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை வழியாக திருச்செந்தூர், சென்னை, ராமேசுவரம், வாரணாசி, நாகர்கோவில், எர்ணாகுளம், கோயம்புத்தூர், திருச்சி, காரைக்கால், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி தஞ்சையில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம்செய்து வருகிறார்கள். வெளியூர்களுக்கு செல்லும் உறவினர்களை வழிஅனுப்பவும், வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களை அழைத்து செல்வதற்கும் ஏராளமானோர் தஞ்சை ரெயில் நிலையம் வந்து செல்கின்றனர். ரூ.20-க்கு விற்பனை இந்த நிலையில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில்…

Read More

இந்தியா பெண்கள் vs பங்களாதேஷ் பெண்கள் சிறப்பம்சங்கள், ஆசிய கோப்பை 2022: ஷஃபாலி வர்மாவின் வேகமான 55 மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸின் முக்கியமான கேமியோ இந்தியாவை 20 ஓவர்களில் 159/5 என உயர்த்தியது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 100-7 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இந்திய அணி 59 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆல்ரவுண்ட் ஷோக்காக இந்தியாவின் ஷஃபாலி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா பெண்கள் vs பங்களாதேஷ் பெண்கள், ஆசியக் கோப்பை 2022 சிறப்பம்சங்கள்: பரம எதிரியான பாகிஸ்தானிடம் இதயத்தை உடைக்கும் தோல்விக்குப் பிறகு, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி, 2022 மகளிர் ஆசியக் கோப்பையில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட்டில் பங்களாதேஷுக்கு எதிராக வசதியான வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் மீண்டு வந்தது. சனிக்கிழமை மைதானம். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இல்லாத நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மந்தனா கேப்டனாக இருந்தார். மந்தனா 38 பந்துகளில் 47…

Read More