Author: Karthick

தீபாவளி பண்டிகை இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும் தான் தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள்.தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் மக்கள் அதற்காக தயாராகி வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே துணி கடைகள், இனிப்பு கடைகள், பட்டாசு கடைகளில் விற்பனை களை கட்ட தொடங்கியது. அதேபோல் பட்டாசு கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்க ஆரம்பித்தனர். சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பு அவ்வப்போது மழை வந்து தீபாவளி விற்பனைக்கு இடையூறு செய்தாலும் மழை நின்ற பிறகு மீண்டும் வியாபாரம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள்…

Read More

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அறுவடை செய்த நெல் நனைந்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொள்முதலில் 22 சதவீத ஈரப்பதம் வரை தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்றுஅதிகாலை வரை அவ்வப்போது மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் சிரமத்துடன் பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து நேற்று ஒரு நாள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டு…

Read More

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் தான் நினைவுக்கு வரும். இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. ஜவுளி எடுக்க, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, பட்டாசு வாங்குவதற்கு என்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தஞ்சை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. தஞ்சை இர்வீன்பாலத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை, தெற்கு அலங்கம், கீழராஜவீதி, அண்ணா சிலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அலைமோதும் மக்கள் கூட்டம் சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையோரத்தில் தரைக்கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன. இதனால் காந்திஜி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள்…

Read More

தஞ்சை மூலை அனுமார் கோவிலில் வருகிற 24-ந்தேதி தீபாவளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 25-ந்தேதி சூரிய கிரகண பாலாபிஷேகம் நடைபெறுகிறது. தீபாவளி சிறப்பு வழிபாடு தஞ்சை மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றன. அதன்படி வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு 6 மணிக்கு மூலை அனுமாருக்கு ஜாங்கிரிகளால் ஆன சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது. சூரிய கிரகணம் பாம்பு (ராகு/கேது) சூரிய மற்றும்…

Read More

தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே நிர்வாகம் வருகிற 27-ந்தேதி முதல் தஞ்சை மற்றும் கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி 27-ந் தேதி முதல் வதோத்ரா, சூரத், வாசை ரோடு, கல்யாண் (மும்பை), பூனா, மந்த்ராலயம், ரேணிகுண்டா, சென்னை எழும்பூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக அகமதாபாத்-திருச்சி இடையே ஒரு வாராந்திர குளிர்கால சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக மேற்கு மண்டல ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில்…

Read More

நடிகர் அஜித்குமார் 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார்சைக்கிள் பயணம் சென்றார். விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு மோட்டார்சைக்கிளில் உலகை சுற்ற அஜித்குமார் திட்டமிட்டு உள்ளார். அதாவது 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றரை…

Read More

ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் ‘காதல்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சென்னை, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா, ’36 வயதினிலே’ திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க தொடர்கினார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்தார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா தற்போது மம்முட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிகா மலையாள சினிமாவில் நடிக்கிறார். கடைசியாக 2009 இல் வெளியான ‘சீதா கல்யாணம்’ திரைப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு பர்ஸ்ட்லுக்…

Read More

சென்னை, வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், வாரிசு படத்தின் முதல் பாடல் குறித்த புதிய தகவல் இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Read More

தஞ்சாவூர் மாநகராட்சி கொண்டு வரும் நகர மறுசீரமைப்பு திட்டங்கள் பலவற்றை தங்களின் அரசியல் /மத செல்வாக்கை பயண்படுத்தி தடுத்து திட்டங்களையே முடக்கி வைக்கின்றனர். பாலங்களின் நீலம் அகலம் சிலருக்காக திருத்தப்படும் போது விபத்துகள் தடுக்கமுடியாதவையாக மாறி விடுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை வாகன பெருக்கம் இன்று பல மடங்கு உயர்ந்த உள்ளது. அதற்கு ஏற்ப மாநகராட்சி திட்டம் வகுக்கும் போது அரசியல் பலத்தை பயண்படுத்தி அந்த திட்டங்களையே முடக்கும் வலிமை பெற்றவர்களாக ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளனர். தஞ்சாவூரில் மாநகராட்சி மற்றும் அரசாங்கம் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை அனுபவித்து கொண்டு இருக்கும் கூட்டம் அதை தடுப்பதிலையே குறியாக உள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் உருவாக்கப்பட்ட மேம்பாலம் அது. இன்று பல பல மடங்கு அதிகமான வாகன / மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக இந்த இடங்கள் மாறிவிட்டது. காலை மாலையில்…

Read More

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணையை முடித்த ஆறுமுகசாமி ஆணையம், அதன் அறிக்கையைக் கடந்த ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, அந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா இறந்த தேதி இன்றுவரை 2016, டிசம்பர் 5 என்று கூறப்பட்டுவந்த நிலையில், ஆறுமுக ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3 மணிமுதல் 3:50 மணிக்குள் ஜெயலலிதா இறந்ததாக சாட்சியங்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் ஜெயலலிதா மரணத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், `சில அதிகாரம் பெற்றோருக்கு உதவ, அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆபிரகாம்,ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்குவதை தள்ளிப்போடலாம்’ என்று இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்ததாக தந்திரம் செய்திருக்கிறார். தவிர்க்க முடியாத அனுமானம் என்னவெனில், ஜெயலலிதாவுக்கு சரியான நேரத்தில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க, சசிகலாவால்…

Read More